திருமணமான இரண்டே நாளில் பெண் மாயம்
திருமணமான இரண்டே நாளில் பெண் மாயம்
திருமணமான இரண்டே நாளில் பெண் மாயம்
ADDED : செப் 12, 2025 04:45 AM
சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் அழகாபுரியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் அஜித் குமார் 25, இவருக்கும் சுக்காங்கல்பட்டியை சேர்ந்த சுகுனியம்மாள் மகள் நிவேதா 22, என்பவருக்கும் செப். 7 ல் திருமணம் நடந்தது.
கடந்த செப் . 10 நள்ளிரவில் பாத்ரூம் செல்வதாக படுக்கையில் இருந்து எழுந்து சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கண்டுபிடித்து தருமாறு கணவர் ஓடைப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
எஸ்.ஐ. ரவி விசாரித்து வருகிறார்.