ADDED : ஜூன் 06, 2025 03:09 AM
ஆண்டிபட்டி: புள்ளிமான்கோம்பை அருகே தெப்பத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி இளையராஜா 35, இவரது மனைவி வனப்பேச்சி 29.
இவரது சொந்த ஊர் மூணாண்டிபட்டியாகும். மூன்று நாட்களுக்கு முன் தனது அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற வனப்பேச்சியை கணவர் தேடி சென்றுள்ளார். வனப்பேச்சி தனது தாய் வீட்டில் இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் சென்று விட்டார்.
ஆனால் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கணவர் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.