Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/வைகை அணையில் இருந்து 2 மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

வைகை அணையில் இருந்து 2 மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

வைகை அணையில் இருந்து 2 மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

வைகை அணையில் இருந்து 2 மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

ADDED : பிப் 06, 2024 03:18 AM


Google News
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் இன்று(பிப்.,6) காலை 6:00 மணிக்கு நிறுத்தப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் பெய்த மழை, பெரியாறு அணை நீர்வரத்தால் வைகை அணை நீர்மட்டம் கடந்தாண்டு நவ., 10ல் 70.16 அடியாக உயர்ந்தது. அன்றே திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக சில மாதங்களாக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டதால் டிச., 7ல் அணை நீர்மட்டம் 63 அடியாக குறைந்தது. அடுத்தடுத்து பெய்த மழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கடந்த ஜன., 6 அதிகாலை 4:45 மணிக்கு முழு அளவான 71 அடியை எட்டியது.

அணைக்கு வந்த உபரி நீர் முழுவதும் வைகை ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கும் நீர் வெளியேறியது. ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் ஜன.,23ல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 1700 கன அடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்படுவதாகவும், குடிநீருக்காக வழக்கம்போல் வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்பாசனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை வைகை அணை நீர்மட்டம் 68.96 அடியாக இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us