ADDED : ஜூன் 08, 2025 04:55 AM
உத்தமபாளையம் : தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சாந்தி 50,
இவரது தாயார் பேச்சியம்மாள் 80, நேற்று முன்தினம் உத்தமபளையம் ஞானம்பிகை கோயிலிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
மதியம் 12:00 மணியளவில் கோயில் அருகில் இருந்ததாக சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளன.
தனது தாயை கண்டுபிடித்து தருமாறு உத்தமபாளையம் போலீசில் சாந்தி புகார் செய்தார். போலீசார் விசாரிக்கிறனர்.