ADDED : ஜூன் 05, 2025 04:09 AM
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 48, ஆட்டோ தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது.
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இவரது இளைய மகள் மதுமிதா வீட்டில் இருந்துள்ளார். மதுமிதாவிற்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இன்று (ஜூன் 5) திருமணம் நடப்பதாக இருந்தது. இரு நாட்களுக்கு திருமணத்திற்கு நகைகள் எடுப்பதற்காக பெற்றோர் கடமலைக்குண்டு சென்றுள்ளனர்.
பாட்டி தேனம்மாள் பாதுகாப்பில் இருந்த மதுமிதா திடீரென்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. செந்தில்குமார் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.