/உள்ளூர் செய்திகள்/தேனி/எஸ்.பி.ஐ., கடன் சமாதான முகாமில் வராக்கடன்களுக்கு தீர்வுஎஸ்.பி.ஐ., கடன் சமாதான முகாமில் வராக்கடன்களுக்கு தீர்வு
எஸ்.பி.ஐ., கடன் சமாதான முகாமில் வராக்கடன்களுக்கு தீர்வு
எஸ்.பி.ஐ., கடன் சமாதான முகாமில் வராக்கடன்களுக்கு தீர்வு
எஸ்.பி.ஐ., கடன் சமாதான முகாமில் வராக்கடன்களுக்கு தீர்வு
ADDED : ஜன 25, 2024 06:01 AM

தேனி: தேனியில் எஸ்.பி.ஐ., வங்கி சார்பில் கடன்சமாதான தீர்வு திட்ட முகாம் நடந்தது. மதுரை மண்டல மேலாளர் மதன் தலைமை வகித்தார்.
துணைப் பொது மேலாளர் அமித்ரஞ்சன் முன்னிலை வகித்தார். முதன்மை மேலாளர்கள் ரெங்கராஜ், ஜெயசரவணன் வரவேற்றனர் தேனி எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள், பயனாளிகள் பங்கேற்றனர். நிகழ்வில் எஸ்.பி.ஐ., வங்கியின் சார்பில், சென்னை வட்டார பொது மேலாளர் கோவிந்த் நாராயணன் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கார் வாங்குவதற்கான கடன், வீட்டுக்கடன், தனிநபர் கடன், தொழில் கடன், விவசாயக்கடன், கல்விக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் உட்பட 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.20 கோடிக்கான கடன் உத்தரவுக்கான ஆணைகளை வழங்கினார். மேலும் 30 பயனாளிகளுக்கான வராக்கடன் தீர்வுக்கான ஒப்புதல்களையும், பயனாளிகளுக்கு வழங்கினார்.
வங்கி மூலம் கடன் பெற்றோர் தங்களது செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.