Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மழை தொடர்வதால் டெங்கு பரவும் அபாயம் ஒருங்கிணைந்த நடவடிக்கை - தேவை

மழை தொடர்வதால் டெங்கு பரவும் அபாயம் ஒருங்கிணைந்த நடவடிக்கை - தேவை

மழை தொடர்வதால் டெங்கு பரவும் அபாயம் ஒருங்கிணைந்த நடவடிக்கை - தேவை

மழை தொடர்வதால் டெங்கு பரவும் அபாயம் ஒருங்கிணைந்த நடவடிக்கை - தேவை

ADDED : மே 27, 2025 01:27 AM


Google News
கம்பம்: மாவட்டத்தில் மழை தொடர்வதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளதால் உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மழை தொடர்வதால் தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளது. டயர்கள், சிரட்டைகள், உடைந்த பாத்திரங்கள் என ரோட்டோரத்தில் நல்ல தண்ணீர் தேங்கி நிற்கும். டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ்., வகை கொசுக்கள் தேங்கும் நீரில் முட்டையிட்டு இன பெருக்கம் செய்யும். இதுவே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பாக மாறும்.

எனவே உள்ளாட்சி அமைப்புக்கள், தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத் துறையினரும் வீடுகளில் தண்ணீரை மூடி வைக்க அறிவுறுத்த வேண்டும்.

இரண்டு துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே தென்மேற்கு பருவ மழை காலத்தில் டெங்குவின் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us