/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியாறு அணையில் மழை நீர்மட்டம் 130 அடியை கடந்தது பெரியாறு அணையில் மழை நீர்மட்டம் 130 அடியை கடந்தது
பெரியாறு அணையில் மழை நீர்மட்டம் 130 அடியை கடந்தது
பெரியாறு அணையில் மழை நீர்மட்டம் 130 அடியை கடந்தது
பெரியாறு அணையில் மழை நீர்மட்டம் 130 அடியை கடந்தது
ADDED : ஜூன் 18, 2025 01:27 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் மழையால் நீர்மட்டம் 130 அடியை கடந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4788 கன அடியாக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் காட்டியுள்ளதால் முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழை தொடர்கிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 66.4 மி.மீ., தேக்கடியில் 38.6 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு 3517 கன அடியாக இருந்த நீர்வரத்து 4788 கன அடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக நீர் திறப்பு 1733 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் இருப்பு 4778 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் உயர்ந்து 130.35 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.
லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தி 156 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.