ADDED : ஜூன் 13, 2025 03:09 AM
தேனி: தேனி பங்களாமேடு மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில்,' 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன், பொருளாளர் பாண்டியராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரவிக்குமார், செயலாளர் முத்துக்குமார், நிர்வாகி பவுன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.