ADDED : பிப் 10, 2024 05:58 AM

போடி: தை நான்காவது வெள்ளியை முன்னிட்டு, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்திளை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். போடி குலாலர் பாளையம் காளியம்மன் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.