Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மகன் இறந்ததால் பெற்றோர் தற்கொலை முயற்சி; தந்தை பலி, தாயாருக்கு சிகிச்சை

மகன் இறந்ததால் பெற்றோர் தற்கொலை முயற்சி; தந்தை பலி, தாயாருக்கு சிகிச்சை

மகன் இறந்ததால் பெற்றோர் தற்கொலை முயற்சி; தந்தை பலி, தாயாருக்கு சிகிச்சை

மகன் இறந்ததால் பெற்றோர் தற்கொலை முயற்சி; தந்தை பலி, தாயாருக்கு சிகிச்சை

ADDED : மே 19, 2025 05:41 AM


Google News
தேனி : வருஷநாட்டில் மகன் இறந்த துக்கத்தில், பெற்றோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் தந்தை பலியானார்.

ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு மஞ்சனுாத்து ராமசாமி 55. இவரது மனைவி சுமதி. இவர்களது மகன் ஜெயகணேஷ் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். மகன் இறந்த துக்கத்தில் வருத்தத்தில் இருந்தனர். மகள் ஆண்டிச்சி பெற்றோரை கவனித்து வந்தார். இந்நிலையில் ராமசாமி, சுமதி இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இருவரையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், உறவினர்கள் சேர்த்தனர். தற்கொலை முயற்சியில் தந்தை ராமசாமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். சுமதி சிகிச்சை பெறுகிறார். வருஷநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us