Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பட்டுபோன மரங்களால் விபத்து அபாயம்

பட்டுபோன மரங்களால் விபத்து அபாயம்

பட்டுபோன மரங்களால் விபத்து அபாயம்

பட்டுபோன மரங்களால் விபத்து அபாயம்

ADDED : மே 19, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
தேனி : தேனி நகர் பகுதியில் சில இடங்களில் மரங்கள் பட்டுப்போன நிலையில் காணப்படுகின்றன. இவற்றை நகராட்சி, மின்வாரியத்தினர் இணைந்து ஆய்வு செய்து, அகற்றிட வேண்டும்.

இந்நகர் பகுதியின் முக்கிய ரோடுகளில் இருபுறம் மரங்கள் ஆங்காங்கே உள்ளன. இவைகள் வெயிலின் தாக்கத்தை குறைக்கின்றன. வெயில் அதிகரிக்கும் போது, பலருக்கு நிழல் தந்து பயனளிக்கிறது. அதே சமயம் சில இடங்களில் மரங்கள் பட்டு போன நிலையிலும், கீழே விழும் விபத்து அபாய நிலையில் உள்ளன. குறிப்பாக மதுரை ரோட்டில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சொக்கர் தெரு, கே.ஆர்.ஆர்., நகர் காணப்படுகின்றன. மேலும் இவைகள் பட்டுப்போன மரங்கள் தான் என உறுதி செய்து, பின் அகற்றிட வேண்டும். வரும் நாட்களில் கனமழை, காற்றின் காரணமாக பட்டுப்போன மரங்களால் விபத்துக்கள் ஏற்படும் முன் நகராட்சி, மின்வாரிய அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us