ADDED : மே 10, 2025 07:36 AM
தேனி: வீரபாண்டி எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வயல்பட்டி மெயின் ரோடு தொட்டியம்மன் கோயில் அருகே ரோந்து சென்றனர்.
அங்கு கொடுவிலார்பட்டி அருகே சிவலிங்க நாயக்கன்பட்டியை சேர்ந்த தேவராஜ் 49, ரூ.6300 மதிப்புள்ள 35 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை கைப்பற்றினர்.