Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆவணங்கள் இன்றி ஜல்லி கற்கள் கொண்டு சென்ற லாரிகள் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி ஜல்லி கற்கள் கொண்டு சென்ற லாரிகள் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி ஜல்லி கற்கள் கொண்டு சென்ற லாரிகள் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி ஜல்லி கற்கள் கொண்டு சென்ற லாரிகள் பறிமுதல்

ADDED : மே 11, 2025 11:36 PM


Google News
ஆண்டிபட்டி : பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன், ஆண்டிபட்டி வருவாய் துறையினர் ரோந்து பணியில் இருந்தனர்.

ஆண்டிபட்டி புள்ளிமான்கோம்பை ரோட்டில் தனியார் கிரஷர் அருகே சென்ற லாரிகளை சோதனை செய்தனர்.

இந்த லாரிகளுக்கு உடைகற்கள் கொண்டு செல்ல கொடுக்கப்பட்ட 'கேட் பாஸ்' தவறாக இருந்துள்ளது.

இதுகுறித்து கேட்டபோது டிரைவர்கள் முறையான பதில் சொல்லாமல் அங்கிருந்து ஓடி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து திம்மரசநாயக்கனூர் பிட் 2 வி.ஏ.ஓ., தங்கமாரிமுத்து புகாரில், ஆண்டிபட்டி போலீசார் லாரிகளை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us