/உள்ளூர் செய்திகள்/தேனி/தேசிய அளவில் சாதனை படைத்த தேனி மாணவர்களுக்கு பாராட்டுதேசிய அளவில் சாதனை படைத்த தேனி மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய அளவில் சாதனை படைத்த தேனி மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய அளவில் சாதனை படைத்த தேனி மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய அளவில் சாதனை படைத்த தேனி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 05, 2024 05:19 AM

தேனி : தேசிய அளவில் நடந்த ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டியில் தேனி வேலம்மாள் பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள் தேர்வு திருச்சியில் நடந்தது. இதில் தேர்வான தேனி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் 16 பேர் குஜராத் சூரத்தில் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்றனர். போட்டிகள் 11,14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடந்தது.
இதில் தேனி பள்ளி மாணவர்கள் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் தங்கப்பதக்கம், 17,11 வயதிற்குட்பட்ட பிரிவில் வெள்ளி, 14 வயதிற்குட்பட்ட பிரிவில் வெண்கலபதக்கம் வென்றனர்.இதில் பிளஸ் 2 மாணவர்கள் பார்க்கவ பரனேஷ், வெங்கடேஷ்வரன், பிளஸ் 1 மாணவர் மகாவிஷ்ணு ஆகியோர் பிப்., இலங்கையில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகினர். பதக்கங்கள் வென்று திரும்பிய மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் செல்வி, துணை முதல்வர் சவிதா, உடற்கல்வி இயக்குனர் கலையரசி, பயிறுனர் ராஜேஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.