Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/வேலை வாங்கி தருவதாக மோசடி: டி.டி.ஆர்., கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி: டி.டி.ஆர்., கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி: டி.டி.ஆர்., கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி: டி.டி.ஆர்., கைது

ADDED : ஜன 28, 2024 01:55 AM


Google News
Latest Tamil News
தேனி: தேனி அல்லிநகரம் ஒண்டிவீரன் காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்; ரயில்வே டிக்கெட் பரிசோதகர். இவரது மனைவி துர்காதேவி.

இவர்கள் அதே பகுதியை சேர்ந்த துளசி என்பவரிடம், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

துளசி வாயிலாக, அப்பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி பாப்பாத்தியிடம், 5.34 லட்சம் ரூபாய், கொடுவிலார்பட்டியை சேர்ந்த முருகன், 49, என்பவரிடம், 5.70 லட்சம் ரூபாயை 2022 டிசம்பரில் பெற்றனர். இருவரது மகன்களுக்கும் போலி பணி நியமன ஆணையை கொடுத்து ஏமாற்றினர்.

மேலும், தேனியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம், போடியில் உள்ள தன் இடத்தை விற்பனை செய்வதாக கூறி, 15 லட்சம் ரூபாய் என, மொத்தம் 26.05 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றினார்.

முருகன் தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

விசாரணையில், பாலகிருஷ்ணன் வேலை வாங்கி தருவதாக கூறி, அல்லிநகரத்தை சேர்ந்த சுகனிடம், 9 லட்சம் ரூபாய், மதுரையை சேர்ந்த விஜயபாண்டி, சிவபிரபுவிடம், 20 லட்சம் ரூபாய், கிஷோரிடம், 5 லட்சம் ரூபாய் என, 60 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரிந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us