ADDED : செப் 13, 2025 04:25 AM
தேனி: தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இணைப்பதிவாளர் நர்மதா தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில் கடமலைக்குண்டு ராஜேந்திரன், செல்லாண்டி, ராஜா ஆகியோர் பதவி உயர்வுகோரியும், விடுபட்ட பயனீட்டாளர் தொகை வழங்க வலியுறுத்தியும் மனு அளித்தனர். குறைதீர் கூட்டம் 20 நிமிடத்தில் முடித்தது.
முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் அதிக பணியாளர்கள்பங்கேற்க வில்லை என ரேஷன்கடை பணியாளர்கள் தெரிவித்தனர்.