/உள்ளூர் செய்திகள்/தேனி/அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மாநாடு ஜன.9ல் சென்னையில் நடக்கிறதுஅரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மாநாடு ஜன.9ல் சென்னையில் நடக்கிறது
அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மாநாடு ஜன.9ல் சென்னையில் நடக்கிறது
அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மாநாடு ஜன.9ல் சென்னையில் நடக்கிறது
அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மாநாடு ஜன.9ல் சென்னையில் நடக்கிறது
ADDED : ஜன 03, 2024 01:11 AM
தேனி:தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் மாநாடு ஜன.9ல் சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மூலம் பள்ளிகள் மேம்படுத்த தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. அதற்காக இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான முன்னாள் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களை ஒருங்கிணைத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் ஜன.,9ல் மாநில மாநாடு நடக்கிறது.
இதில் அரசுப்பள்ளி வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றிய முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்திற்கு 18 அரசுப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளது. பள்ளிக்கு இரு முன்னாள் மாணவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அவர்களுடன் தலைமை ஆசிரியர் அல்லது ஒரு ஆசிரியர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சி.இ.ஓ.,க்கள் செய்துவருகின்றனர்.