/உள்ளூர் செய்திகள்/தேனி/கேரளாவில் 5024 எக்டேர் வன நிலம் ஆக்கிரமிப்புகேரளாவில் 5024 எக்டேர் வன நிலம் ஆக்கிரமிப்பு
கேரளாவில் 5024 எக்டேர் வன நிலம் ஆக்கிரமிப்பு
கேரளாவில் 5024 எக்டேர் வன நிலம் ஆக்கிரமிப்பு
கேரளாவில் 5024 எக்டேர் வன நிலம் ஆக்கிரமிப்பு
ADDED : ஜன 11, 2024 03:52 AM
மூணாறு : கேரளாவில் வனத்துறைக்கு சொந்தமான 5024.53 எக்டேர் வன நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது அறிக்கையில் தெரியவந்தது.
கேரளாவில் 2021-2022 ன் வருடாந்திர நிர்வாக அறிக்கையை வனத்துறை வெளியிட்டது.
அதில் வனத்துறைக்குச் சொந்தமான வன நிலம் 5624.53 எக்டேர் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்கள் உட்படும் ஹைரேஞ் வட்டாரத்தில் கூடுதல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மூணாறு டிவிஷனில் மட்டும் 1099.65 ஹெக்டர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கோதமங்கலம், கோட்டயம், மாங்குளம், நிலம்பூர் வடக்கு, மண்ணார்காடு, நென்மாரா, வயநாடு வடக்கு ஆகிய வனத்துறை டிவிஷன்களிலும் ஆக்கிரப்புகள் அதிகம் உள்ளன. மறையூர், தென்மலை, நிலம்பூர் தெற்கு , ஆரளம், வயநாடு ஆகிய வனவிலங்கு சரணாலயங்களில் ஆக்கிரமிப்புகள் குறைவாகும். 2021 -20-22 ஆண்டின் அறிக்கை மிகவும் காலதாமதாக வெளியிடப்பட்ட நிலையில் 2022--2023 ஆண்டின் அறிக்கை வெளியிடப்படவில்லை.
இந்தாண்டு மார்ச்க்கு முன்பாக 2023-20-24 ஆண்டின் நிர்வாக அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
கேரளாவில் 1954ல் 9846 சதுர கி.மீ. வனம் இருந்தது. 2009ல் 11309 சதுர கி.மீட்டராக அதிகரித்தது. தற்போது 11521.814 சதுர கி.மீ. சுற்றளவில் வனம் உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளனர்.