ADDED : ஜூன் 24, 2025 03:22 AM

கடமலைக்குண்டு,: கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியம் குமணன்தொழுவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
போட்டியில் நடுமாடு, கரிச்சான், தேன்சிட்டு, இளஞ்சிட்டு, பூஞ்சிட்டு ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது.
ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற முதல் 4 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக கடமலைக்குண்டு முதல் குமணன்தொழு வரை போக்குவரத்து தடை செய்து வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
பரிசளிப்பு விழாவில் எம்.எல்.ஏ.,மகாராஜன் தலைமை வகித்து வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கபாண்டி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேது ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபாகரன், இளைஞரணி செயலாளர் பிரபாகரன், ஸ்டீபன் உட்பட பலர் செய்திருந்தனர்.