Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

ADDED : மார் 26, 2025 04:10 AM


Google News
ஆண்டிபட்டி : டி.

பொம்மிநாயக்கன்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 27, இவரது மனைவி வீரம்மாள் 24, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மதுப்பழக்கம் இருந்த சுப்பிரமணி தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்தார். மார்ச் 23ல் வழக்கம்போல் தகராறு செய்த சுப்பிரமணி தனது மனைவியை அடித்து கீழே தள்ளினார். காயமடைந்த வீரம்மாள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மறுநாள் சுப்பிரமணி விஷம் குடித்து டி.பொம்மிநாயக்கன்பட்டி நெல் களத்தில் இறந்து கிடப்பதாக வீரம்மாளின் மாமனார் பழனிமுத்து போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us