/உள்ளூர் செய்திகள்/தேனி/அறிவுசார் மையத்தில் குடிநீர் இன்றி சிரமம்அறிவுசார் மையத்தில் குடிநீர் இன்றி சிரமம்
அறிவுசார் மையத்தில் குடிநீர் இன்றி சிரமம்
அறிவுசார் மையத்தில் குடிநீர் இன்றி சிரமம்
அறிவுசார் மையத்தில் குடிநீர் இன்றி சிரமம்
ADDED : பிப் 25, 2024 04:25 AM
தேனி : தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் அறிவுசார்மையம், நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு படிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில் இருந்து அரசு போட்டித்தேர்விற்கு தயாராகுபவர்கள் வந்து படிக்கின்றனர். அடிப்படை வசதி மற்றும் போக்குவரத்திற்கு எளிதாக உள்ளதால் தேர்விற்கு தயாராகுபவர்கள் மட்டுமின்றி பஸ்ஸ்டாண்ட் வருபவர்களும் படிப்பதற்காக இங்கு வருகின்றனர். இங்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாததால் குடிநீர் வழங்க இயலவில்லை. இதனால் படிக்க வந்திருந்த பலர் குடிநீர் இன்றி சிரமத்திற்கு உள்ளாகினர்.
சிலர் பணம் கொடுத்து பாட்டில் குடிநீர் வாங்கி பருகும் நிலை உருவானது.
அறிவு சார்மையத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.