ADDED : ஜன 04, 2024 06:24 AM
மூணாறு: மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனைச் சேர்ந்த தொழிலாளி வளர்மதியின் பசு மாடை புலி தாக்கியதால் இறந்தது.
நேற்று முன் தினம் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாலையில் வீடு திரும்பவில்லை. அதனை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை. அதே எஸ்டேட்டைச் சேர்ந்த டாப் டிவிஷனில் தேயிலை தோட்ட எண் 7ல் பசு இறந்து கிடந்ததை பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் பார்த்தனர். அதன் உடல் பாதி தின்ற நிலையில் கிடந்ததால் புலி தாக்கி கொன்றதாக தெரிய வந்தது. கடந்த ஓராண்டில் மூன்று பசுக்கள் புலி தாக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.