/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரூ.8 லட்சம் கடனுக்கு செக் வழங்கி மோசடி; நீதிமன்ற உத்தரவில் வழக்கு ரூ.8 லட்சம் கடனுக்கு செக் வழங்கி மோசடி; நீதிமன்ற உத்தரவில் வழக்கு
ரூ.8 லட்சம் கடனுக்கு செக் வழங்கி மோசடி; நீதிமன்ற உத்தரவில் வழக்கு
ரூ.8 லட்சம் கடனுக்கு செக் வழங்கி மோசடி; நீதிமன்ற உத்தரவில் வழக்கு
ரூ.8 லட்சம் கடனுக்கு செக் வழங்கி மோசடி; நீதிமன்ற உத்தரவில் வழக்கு
ADDED : மார் 23, 2025 07:24 AM
தேனி : தேனி மாவட்டம், உத்தமபாளையம் எஸ்.தர்மத்துப்பட்டி வசந்த 24, என்பவரிடம் ரூ.8 லட்சத்திற்கான செக் வழங்கி மோசடி செய்த தேனி காமராஜர் லைன் வெங்கிடாசலம் 52, மீது நீதிமன்ற உத்தரவில் தேனி போலீசார் வழக்கு பதிந்தனர்.
உத்தமபாளையம் எஸ். தர்மத்துப்பட்டி வசந்த் என்பவர் அதே பகுதியில் ஜவுளிக்கடையும், தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அலுவலகம் அமைத்து பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இவரது தந்தை திருப்பதிக்கு தெரிந்தவரான வெங்கடாசலம் ரூ.2லட்சம் கடனாக பெற்றார். அதன்பின் வீரபாண்டி திருவிழாவில் கடை அமைக்க கடந்த ஆண்டு ரூ.2லட்சம் பெற்றார். இந்நிலையில் வசந்த் வெளிமாநிலம் சென்றிருந்தார்.
அப்போது அலுவலகத்தில் இருந்த திருப்பதியிடம், மேலும் ரூ.4லட்சம் கடனாக பெற்றார். இதற்காக ரூ.8 லட்சத்திற்கு காசோலை வழங்கினார்.அந்த காசோலையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்த போது, வெங்கிடாசலம் வங்கி கணக்கில் பணம் இல்லை என செக் திரும்பியது. ஏமாற்றிய வெங்கிடாசலம் மீது தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் வசந்த் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. இதன்பேரில் வெங்கிடாசலம் மீது தேனி போலீசார் வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.