ADDED : ஜன 25, 2024 05:50 AM
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி சுப்பு காலனியைச் சேர்ந்தவர் சுமதி, கைத்தறியில் நெசவு செய்ய வேண்டிய துணிகளான காட்டன் ரக சேலையை விசைத்தறியில் கூடுதல் பாவு இழைகளுடன் நெசவு செய்துள்ளார்.
இது குறித்து மதுரை கைத்தறி உற்பத்தி ரக ஒதுக்கீடு உதவி அமலாக்க அலுவலர் வரதராஜன் ஆய்வில் தெரிய வந்தது. ஆண்டிபட்டி போலீசில் கொடுத்த புகாரை தொடர்ந்து எஸ்.ஐ.,பன்னீர்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.