Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்; இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்பு

மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்; இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்பு

மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்; இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்பு

மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்; இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்பு

ADDED : ஜூன் 08, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
கம்பம் : மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் ஏராளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தினர்.

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையொட்டி நேற்று காலை கம்பத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இருந்து வாவேர் பள்ளிவாசலில் கூடினார்கள். பின் அங்கிருந்து ஜமாத் தலைவர் ஜைனுலாப்தீன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு ரேஞ்சர் ஆபிஸ் அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். தலைமை இமாம் அலாவுதீன் மிஸ்பாகி தொழுகையை நடத்தினார். ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இதில் பங்கேற்றனர்.

உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசலில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜமாத் தலைவர் தர்வேஷ்முகைதீன் தலைமையில் இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர். சின்னமனூரில் பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாம் ஆதம் ரசாதி சிறப்பு தொழுகையை நடத்தினார்.

போடி: போடி புதூர் பெரிய பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை தலைவர் தங்கப்பா தலைமையில் நடந்தது. இமாம் காதர் பாட்ஷா நூரி முன்னிலை வகித்தார். போடி புதூர் பெரிய பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர். ஏராளமான இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர். டி.வி.கே.கே., நகர் பள்ளி வாசல் தலைவர் சையது அபுதாகீர், மேலத்தெரு பள்ளிவாசல் தலைவர் சர்புதீன், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேனி: அல்லிநகரம் பள்ளிவாசலில் இருந்து கம்பம் ரோடு பள்ளிவாசல் வரை இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தலைவர் ஜீயாவுதீன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடத்தினர்.பெரியகுளம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்தனர். ஆட்டின் இறைச்சியை மூன்றாக பிரித்து 'குர்பானி' கொடுத்து மகிழ்ந்தனர். ஒரு பகுதி வசதியில்லாதவர்களுக்கும், மற்றொரு பகுதி நண்பர்கள் மற்றும் உறவினர்கள், மீதமுள்ள பகுதியை தங்கள் குடும்பத்திற்கும் பகிர்ந்து கொண்டனர். பெரியகுளம், தாமரைக்குளம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உட்பட தாலுகா முழுவதும் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. ஒருவருக்கொருவர் தழுவி அன்பை பகிர்ந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us