போடி : மாவட்ட நுகர்வோர் மன்றம் சார்பில் மாணவர்களுக்காக நடந்த போட்டியில் போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி ராஜராஜேஸ்வரி பேச்சு போட்டியில் முதலிடம் பெற்றார்.
தரமுத்திரை கண்டறிதல் போட்டியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியதர்ஷினி 3 ம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் பிருதிவிராஜன், உதவி தலைமையாசிரியர்கள் செந்தில்குமார், வெங்கடேஸ்வரி, சாந்தி, மாணவர் நுகர்வோர் மன்ற ஆசிரியர் காளியப்பன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.