ADDED : ஜன 06, 2024 06:38 AM
பெரியகுளம்: ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் ரஞ்சித்குமார். இவர் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரியும் நபர்களை மீட்டு, பெரியகுளம் அரசு மனநலகாப்பகத்தில் சிகிச்சைக்கு சேர்த்து வருகிறார். அவர்கள் குணமடைந்த பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்து மனிதநேய சேவை செய்து வருகிறார்.
பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனையில் இவரது சேவையை பாராட்டி மருத்துவ இணை இயக்குனர் ரமேஷ் பாபு, கண்காணிப்பாளர் குமார், டாக்டர்கள் பாரதி, மகேஸ்வரி, ராஜேஷ் ஆகியோர் பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கி கவுரவித்தனர்.