/உள்ளூர் செய்திகள்/தேனி/பழமையான சிவன் கோயில் சிற்பங்கள்: வருஷநாடு அருகே கண்டுபிடிப்புபழமையான சிவன் கோயில் சிற்பங்கள்: வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு
பழமையான சிவன் கோயில் சிற்பங்கள்: வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு
பழமையான சிவன் கோயில் சிற்பங்கள்: வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு
பழமையான சிவன் கோயில் சிற்பங்கள்: வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு

பேச்சியம்மன் சிலை
தலையில் ஜூவாலை கிரீடம், இடது கையில் ஒரு பெண்ணை பிடித்து வயிற்றை கீரிய நிலையிலும், வலது கையில் ஒரு குழந்தையை ஏந்திய நிலையிலும், பயமுறுத்தும் கண்கள், அகன்ற மூக்கு, நீளமான வாய், பெரிய காதுகள், புடைத்த மார்பகங்கள், பெரிய பரந்த பாதங்கள், மார்புக்கூடு எலும்புகள் தெரியும் வகையில் பார்ப்போரை பயமுறுத்தும் வகையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அய்யனார் சிலை
மண்டலமர்வு எனும் உத்குடி ஆசனத்தில் சிற்பம் வடிவமைப்பது உண்டு. ஆனால் இங்குள்ள சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜா லீலாசனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செவ்வக பீடம் மீது இடக்காலை பக்கவாட்டில் குத்திட்டு வலக்காலை தாழவிட்டு தனித்திருக்கும் அய்யனாரின் வலது கையில் சாட்டை போன்ற செண்டையும், இடது கை முழங்கால் முட்டி மீதமைந்து பக்கவாட்டில் நீண்டு தொங்கும் நிலையில் உள்ளது. தலையில் விரித்த அலங்கார ஜடாபாரம், தனித்தனி இழைகளாக சுருண்டு அழகுற அமைந்துள்ளது.
தட்சிணாமூர்த்தி சிலை
சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி வடிவமானது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்துள்ளார். பூணூல் அணியப்பட்டுள்ளது. கரந்தை மகுடம், கைகளில் வளையல், கால்களில் வீரக்கழல், கால் விரல் அணிகள், அபய வரத முத்திரையுடன் பின் வலது கையில் மழு உள்ளது.
சிவலிங்கம்
பத்ம பீடம், அதாவது தாமரைப் பூ கவிழ்ந்த நிலை, அதற்கு மேல் ஆவுடையும், லிங்க பாணம் இல்லாமலும் உள்ளது. கி.பி.,17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில் மதுரை சொக்கநாதருக்கும் பார்வதி அம்மனுக்கும் நெய் விளக்கு தானமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட சிலைகள் மற்றும் கல்வெட்டு மூலம் இந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாண்டியர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை தொடர் வழிபாட்டில் இக்கோயில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.