ADDED : ஜூன் 07, 2024 06:39 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ராமு அம்பலம் தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் முத்துபெருமாள் 19.இவர்
கைலாசபட்டி கருப்பணசாமி கோயில் திருவிழாவிற்கு மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபடும் போது, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
அவரை டாக்டர் பரிசோதித்து முத்துபெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தார். தென்கரை சிறப்பு எஸ்.ஐ., தண்டபாணி விசாரணை செய்து வருகிறார்.