Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ வடுகபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

வடுகபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

வடுகபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

வடுகபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

ADDED : ஜூலை 21, 2024 08:05 AM


Google News
பெரியகுளம்: வடுகபட்டி பேரூராட்சிக்கு வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யாததால் 6 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தாமரைக்குளம் கண்மாயில் போர்வெல் அமைத்தும், சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து 3 மேல்நிலைத் தொட்டியிலிருந்து தினமும் 13 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இதில் அதிகபட்சமாக வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 8 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

9 நாட்களாக வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் சப்ளை செய்யவில்லை. இதனால் வடுகபட்டியில் 6 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பேரூராட்சி தலைவர் நடேசன் கூறுகையில்,' கூட்டு குடிநீர் திட்டம் செயற்பொறியாளர் ராமச்சந்திரனிடம் பிரச்ைன குறித்துஇரு முறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us