ADDED : ஜூலை 14, 2024 03:57 AM
தேனி, : கொடுவிலார்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். கருத்தரங்கில் சங்கத்தினர் பணிகளை நேர்மையாகவும், சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கருத்தரங்கில் மாநில செயல்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் குமரேசன், மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், மாநில செயலாளர்கள் வீரகடம்பகோபு, ராஜேசேகர் பேசினர்.