Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு

பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு

பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு

பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு

ADDED : ஜூன் 23, 2024 04:41 AM


Google News
போடி: போடி கிருஷ்ணா நகரில் வசிப்பவர் சுரேஷ் 42. இவரது மைத்துனர் பிரதீப் முத்தையன் செட்டி பட்டியில் வசித்து வருகிறார்.

பிரதீப் தந்தைக்கு சொந்தமான முத்தையன் செட்டிபட்டியில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை சுரேஷ் விலைக்கு வாங்கி உள்ளார். இதில் பிரதீப் பங்கு கேட்டு பிரச்னை செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பிரதீப் அவருடன் அடையாளம் தெரியாத 2 நபர்கள் சேர்ந்து சுரேஷ் வீட்டில் இருந்த போது தகாத வார்த்தை பேசி, கையில் வைத்து இருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

போடி தாலுகா போலீசார் பிரதீப் உட்பட 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us