ADDED : ஜூன் 09, 2024 04:40 AM
பெரியகுளம் : பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மகாத்மா காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஆண்டணிராஜா 43.
இவரது மனைவி கல்லூரி பேராசிரியை அனுஷா ஏஞ்சல் 40. விடுமுறைக்கு குடும்பத்துடன் நாகர்கோவில் சென்றனர். வீடு திரும்பியபோது முன் பக்கம் கதவு திறந்து இருந்தது. பிள்ளைகள் 'மணி பர்ஸ், உண்டியலில்' சேமித்து வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.