ADDED : ஜூலை 29, 2024 12:24 AM

ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்துார் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் தேனி மாவட்ட சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இக்கோயிலில் கால பைரவர் சன்னதி முன் அமர்ந்து 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்து திருவாசகம் பாடினர். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.