Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தரமில்லாமல் உணவு தயாரித்த 102 கடைகளுக்கு ரூ.16.23 லட்சம் அபராதம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் தகவல்

தரமில்லாமல் உணவு தயாரித்த 102 கடைகளுக்கு ரூ.16.23 லட்சம் அபராதம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் தகவல்

தரமில்லாமல் உணவு தயாரித்த 102 கடைகளுக்கு ரூ.16.23 லட்சம் அபராதம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் தகவல்

தரமில்லாமல் உணவு தயாரித்த 102 கடைகளுக்கு ரூ.16.23 லட்சம் அபராதம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் தகவல்

ADDED : ஜூன் 07, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
தேனி: தரமில்லாமல் உணவு தயார் செய்த 102 கடைகளுக்கு ரூ.16.23 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 78 கடைகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ராகவன் கூறினார்.

பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்காத, சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஓட்டல்கள், கடைகள், உணவு நிறுவனங்களில் தரமில்லாத பொருட்கள் தயாரிப்பை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்தவும், விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் தினமும் தங்கள் பகுதியினை கண்காணித்து வருகின்றனர். இத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன் தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:

உணவு பாதுகாப்ப அலுவலர்கள் பணி என்ன பொதுமக்களுக்கு தரமான, கலப்படம் இல்லாத உணவுப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது. உணவு தயாரிப்பு இடங்கள், விற்பனை நிலையங்களில் தொடர் ஆய்வு செய்தல். சுகாதாரம் பின்பற்றாத, தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு தரநிர்ணய சட்டம் 2006, விதிகள் 2011ன்படி நடவடிக்கை மேற்கொள்வது முக்கிய பணி ஆகும். உணவுகளில் அதிக செயற்கை நிறமி பயன்பாடு உள்ளதே


பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்கள், சிக்கன் உள்ளிட்ட மாமிச உணவுப் பொருட்களில் செயற்கை நிறமி பயன்படுத்த அனுமதி இல்லை. பேக்கரிகளில் மட்டும் குறிப்பிட்ட அளவு செயற்கை நிறமி பயன்படுத்தலாம். அதிலும் அதிக அளவில் நிறமி சேர்க்கப்படுகிறதா என ஆய்வுகள் செய்யப்படுகிறது. நிறமி அதிக அளவில் இருந்தால் அந்த வகை உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்கிறோம். விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

உணவு விற்பனை கடைகளில் ஆய்வு செய்யப்படுகிறதா மாவட்டத்தில் உள்ள தனியார் உணவு விற்பனை நிலையங்கள், ஆவின் விற்பனை நிலையங்கள், கோயில் அன்னதான உணவுகள், பள்ளி, கல்லுாரி கேண்டின், விடுதிகள் என அனைத்து வகையான உணவு தயாரிக்கும் இடங்கள், விற்பனை நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கடந்தாண்டு மாவட்டத்தில் இருந்து 470 உணவு மாதிரிகள் எடுத்து ஆய்வுகள் செய்யப்பட்டன. அதில் 102 மாதிரிகள் தரம் குறைந்து காணப்பட்டன. இந்த கடைகளுக்கு ரூ.16.23 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விதி மீறிய 78 கடைகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. இது தவிர செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரிம் ஒரு டன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது.

உணவு தயாரிப்போர், விற்பனை செய்வோருக்கு பயிற்சி வழங்கப்படுகிறதா உணவு தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி உணவு தயாரிப்போர், கடைகளில் விற்பனையில் ஈடுபடுவோருக்கு உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சிறுகுறு வியாபாரிகள், ரோட்டோர வியாபாரிகள், ஓட்டல் பணியாளர்கள், கோயில் களில் உணவுத் தயாரிப்போர், பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், சத்துணவுத்திட்ட பணியா ளர்களுக்கும் பயிற்சிகள் வழங்குகின்றோம். கடந்தாண்டு மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 1500 இடங்களில் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் 7ஆயிரம் பேர் பயிற்சி பெற்றனர். சுகாதாரத்தை பின்பற்றும் கடைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறதா மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் உணவுத்தரம், சுகாதாரத்தை பின்பற்றுவதை வாடிக்கையாளர்கள் மதிப்பெண் அளிக்கும் வகையில் 'ஹைஜீன்' சான்றிதழ்கள் வழங்குகிறோம். இதுவரை 2500 கடைகளுக்கு இச்சான்றிதழ் வழங்கி உள்ளோம். இதில் ஒன்று முதல் 5 வரை ஸ்டார் அளிக்கும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. எந்த கடைகளில் 3 ஸ்டார்களுக்கு குறைவாக வருகிறதோ, அந்த கடையில் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளை 30 நாட்களில் நிவர்த்தி செய்ய அறிவுறுத்துகிறோம். பின்பற்றாத கடைகளுக்கு அபராதம், தொடர்ந்து சீல்வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 14 கோயில்களுக்கும் சுகாதரத்தை பின்பற்றுகின்றனவா என ஆய்வு செய்து ஓராண்டிற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் மீது நடவடிக்கை


அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுகிறா என தொடர் ஆய்வுகள் செய்து வருகிறோம். ஓராண்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 258 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள 948 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இக்கடைகளுக்கு ரூ. 36.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி அருகில் செயல்பட்ட 60 கடைகளில் இருந்து 121 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் புகையிலை பயன்பாட்டை தடுப்பதுபற்றி


கலெக்டர் உத்தரவில் இந்தாண்டு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் மருத்துவ குழுவினர் மாணவர்களை பரிசோதனை செய்கின்றனர். புகையிலை பயன்படுத்தும் மாணவர்களின் பற்களில் கரை படிந்தும், அதன் துகள்கள் ஒட்டி இருக்கும். இம்மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தனியாக 'கவுன்சிலிங்' வழங்கப்பட உள்ளது. அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மோக் பிஸ்கட், ஷவர்மா விற்பனை உள்ளதா


மாவட்டத்தில் ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்ப்படுவதில்லை. அதே போல் சில கடைகளில் மட்டும் ஷவர்மா விற்பனை செய்யப்படுகிறது. அங்கு தரமான சிக்கன், பிற மூலப்பொருட்கள் பயன்படுத்த கடைகாரர்களை அறிவுறுத்தி வருகி ஆய்வுகள் செய்யபடுகிறது.

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்கிறதே


உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் நடந்த ஆய்வுகளில் கடந்த ஓராண்டில் 672 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விற்பனை செய்தவர்களுக்கு ரூ.3.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 168 கடைகளுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மறுசுழற்சிக்கு செல்கிறதாஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த வேண்டாம் என ஓட்டல்கள், ரோட்டோர வியாபாரிகளிடம் தொடர்ந்து அறிவுறுத்திகிறோம். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை வியாபாரிகளிடமிருந்து எடுத்து செல்ல 3 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எடுத்து செல்லப்படும் எண்ணெய்கள் பயோ டீசல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. சிலர் பயன்படுத்தி எண்ணெய்களை கூடுதல் விலைக்கு வாங்கி சென்று மீண்டும் சுத்திகரித்து பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இதனால் எண்ணெய் வாங்கி செல்பவர்கள் பற்றி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us