Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ போலீஸ் செய்திகள் ....

போலீஸ் செய்திகள் ....

போலீஸ் செய்திகள் ....

போலீஸ் செய்திகள் ....

ADDED : ஜூன் 20, 2024 05:14 AM


Google News
கார் மீது மோதிய மினிபஸ்

டிரைவர் மீது வழக்கு

தேனி: பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரம் வாஞ்சிநாதன் தெரு சுதா 40. தனது கணவர் முத்துக்குமாருடன், காரில் வங்கிக்கு சென்றார். டி.பி.என்., ரோடு வங்கி அருகே காரை நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்றனர். அப்போது சங்க கோணாம்பட்டியை சேர்ந்த டிரைவர் சதீஸ்குமார் ஓட்டிவந்த மினிபஸ் காரின் இடது புறம் மோதிய விபத்தில், கார் சேதமடைந்தது. பழனிசெட்டிபட்டி போலீசார் சதீஸ்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

இடம் தகராறு

5 பேர் மீது வழக்கு

போடி: பெருமாள் கவுண்டன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சுமதி 57. இவருக்கும் அருகே குடியிருக்கும் உதயகுமார் என்பவருக்கும் இடையே இடம் பிரச்னை இருந்தது. இந்நிலையில் நேற்று சுமதி வீட்டில் இருந்த போது உதயகுமார், இவரது மனைவி ராஜம்மாள், மகன் சதீஷ்குமார் மூவரும் சேர்ந்து சுமதியை தகாத வார்த்தை பேசி அடித்துள்ளனர். இது போல சுமதி, இவரது கணவர் சுரேஷ்குமார் இருவரும் சேர்ந்து ராஜம்மாளை தகாத வார்த்தையால் பேசி கையால் அடித்துள்ளனர். சுமதி புகாரில் உதயகுமார், ராஜம்மாள் ,சதீஷ்குமார் மீதும், ராஜம்மாள் புகாரில் சுமதி, சுரேஷ் குமார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கொடுக்கல் வாங்கல் தகராறு

மூவர் மீது போலீஸ் வழக்கு

தேனி:பெரியகுளம் அருகே சாவடிபட்டி முத்தாலம்மன் கோயில் தெரு கணேசன் 59. பால் பண்ணை உரிமையாளர். இவரது மனைவியின் சகோதரர் மாயன். பைனான்ஸ் தொழில் செய்கிறார். இவரிடம் சக்கரைப்பட்டி பொன்மணி, அழகுத்தாய், அவரது கணவர் குபேந்திரன் ஆகியோர் ரூ.10 லட்சம் கடனாக பெற்றனர். கடனை திரும்ப தராததால், பைனான்ஷியர் மாயன் நீதிமன்றத்தில் பொன்மணி, அழகுத்தாய், குபேந்திரன் மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் ஜூன் 18 ல் சக்கரைப்பட்டிக்கு மாயன் தனது குடும்பத்தினருடன் சென்ற போது, பொன்மணியும், குபேந்திரனும் தகாத வார்த்தைகளால் திட்டினர். பொன்மணி இரும்பு சுத்தியலால் கணேசன் தலையில் தாக்கினார். ரத்தக்காயம் ஏற்பட்டது. அழகுத்தாய், கணேசனின் மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில சிகிச்சையில் உள்ளனர். புகாரில், பொன்மணி, குபேந்திரன், அவரது மனைவி அழகுத்தாய் உட்பட மூவர் மீது அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

-கொலை மிரட்டல்

மூவர் மீது வழக்கு

போடி: அருகே அணைக்கரைப்பட்டி கிழக்கு தெரு செல்வி 51. இவரது கணவர் முத்தையா 60. இருவருக்கும் குழந்தை இல்லாததால் 10 ஆண்டுகளுக்கு முன் ரமாதேவி என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். கணவருக்கு சொத்து அதிகம் உள்ளதால், சொத்தை யார் என்று தெரியாது நபருக்கு எதற்கு தருகிறாய் என செல்வியின் கொழுந்தன் லட்சுமணன், இவரது மனைவி சரஸ்வதி, மகன் சுபீஷ் ஆகியோர் கேட்டு செல்வியிடம் அடிக்கடி பிரச்னை செய்துள்ளனர். நேற்று லட்சுமணன், சுபீஷ், சரஸ்வதி மூவரும் சேர்ந்து சொத்தை சுபிஷ் என்பவருக்கு எழுதி தருமாறு தகாத வார்த்தையால் பேசி உள்ளனர். எழுதி தராவிட்டால் ரமா தேவியை சும்மா விட மாட்டோம் என மிரட்டி உள்ளனர். இதனை செல்வியின் தாயார் பார்வதி தட்டி கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த மூவரும் பார்வதியை கீழே தள்ளினர். விலக்கி விட வந்த செல்வி, முத்தையாவையும் தாக்கி கொலை மிரட்டில் விடுத்தனர். போடி தாலுகா போலீசார் லட்சுமணன், சுபீஷ் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பாலத்தில் உட்கார்ந்தவர் மீது தாக்கு

கடமலைக்குண்டு:- மயிலாடும்பாறை அருகே பொன்னம்படுகையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் 26, இரு நாட்களுக்கு முன் பொன்னம்படுகை பிரிவில் உள்ள பாலத்தில் உட்கார்ந்திருந்தார். அப்போது கொங்கரேவைச் சேர்ந்த முத்தையா மகன் மலைச்சாமி 24, 'தான் சரக்கு அடிக்கும் இடத்தில் தினமும் வந்து உட்காருவதாக கூறி' தகராறு செய்துள்ளார். அருகில் கிடந்த கம்பை எடுத்து மலைச்சாமி, வெங்கடேஷ் தலையில் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெங்கடேஷ் புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us