ADDED : ஜூன் 23, 2024 04:42 AM
போடி: போடி அருகே ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வி 28. இவரது பெரியப்பா அசோகன் 62. இருவரும் நேற்று ரோட்டை கடக்க நடந்து சென்றுள்ளனர்.
எதிரே சிலமலையை சேர்ந்த சோணைமுத்து என்பவர் அதிவேகமாக டூவீலரை ஓட்டி வந்ததில் அசோகன் மீது மோதினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அசோகன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போடி தாலுகா போலீசார் சோணைமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.