ADDED : ஜூலை 19, 2024 06:35 AM
கடமலைக்குண்டு : அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் லீலாவதி 70, இவரது கணவர் குமாரசாமி 75, சிறு குறு வியாபாரங்களுக்காக வெளியூர் சென்று மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு ஆண்டு கடந்த பின்பும் கூட திரும்பி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த 10.8.2009ல் வியாபாரத்திற்காக வெளியூர் சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை.
இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு லீலாவதி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.