Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த எதிர்ப்பு

அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த எதிர்ப்பு

அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த எதிர்ப்பு

அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த எதிர்ப்பு

ADDED : ஜூன் 23, 2024 09:44 AM


Google News
தேனி, : ''அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை எதிர்த்து மாநில அளவில் 100 பஸ் டெப்போக்கள் முன் நாளை (ஜூன் 24) ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தப்படும்,'' என, தேனியில் சி.ஐ.டி.யு., மத்திய சங்க துணைத்தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அது 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது 4 ஆண்டுகள் முடிந்து 9 மாதங்களுக்கு மேலாகிறது. இதுவரை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

போக்குவரத்து கழகத்தில் மாநில அளவில் டிரைவர், கண்டக்டர், டெக்னீசியன் உள்ளிட்ட 25 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன.

வாரிசு வேலை கோரி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி, சேலம் அரசு போக்குவரத்து கழகங்களில் டிரைவர், கண்டக்டர்களை ஒப்பந்தத்தில் நிரப்ப டெண்டர் விடப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. 8 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படவில்லை.

இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் மாநில அளவில் 100 பஸ் டெப்போக்கள் முன் நாளை காலை 10:00 மணி முதல் ஜூன் 25 காலை 10:00மணி வரை உண்ணாவிரதம் நடத்தப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us