/உள்ளூர் செய்திகள்/தேனி/ 480 வீடுகளில் 40 மாதங்களாக குடியேற யாரும் வரவில்லை 480 வீடுகளில் 40 மாதங்களாக குடியேற யாரும் வரவில்லை
480 வீடுகளில் 40 மாதங்களாக குடியேற யாரும் வரவில்லை
480 வீடுகளில் 40 மாதங்களாக குடியேற யாரும் வரவில்லை
480 வீடுகளில் 40 மாதங்களாக குடியேற யாரும் வரவில்லை
ADDED : ஜூன் 12, 2024 12:16 AM
உத்தமபாளையம் : தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 480 வீடுகள், கட்டி முடித்து 40 மாதங்களாகியும், பயனாளிகளிடம் ஒப்படைக்காமல் பூட்டி உள்ளது.
அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்காக உத்தமபாளையம் இருந்து கோம்பைக்கு செல்லும் ரோட்டில் சிக்கச்சியம்மன் கோயில் அருகில் 480 வீடுகள் கட்டப்பட்டது. கடந்த 2019ல் இடம் ஒப்படைப்பு செய்து, 15 மாதங்களில் கட்டி முடிக்க நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 2021 பிப்ரவரி மாதம் பணிகள் நிறைவடைந்தது. வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 40 மாதங்களாகிறது.
ஆனால் பயனாளிகள் வீடுகளில் குடியேறவில்லை. வீடுகளுக்குள் கரையான் படிய துவங்கி உள்ளது.
செடி கொடிகள் வளர்த்து புதர்கள் மண்ட ஆரம்பித்துள்ளது. கட்டி முடித்து 40 மாதங்களை கடத்தும் ஏன் வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்காமல் வைத்துள்ளனர் என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக வருவாய்த் துறை வட்டாரங்களில் விசாரித்த போது, சமீபத்தில் கனிசமான வீடுகளில் ஆட்கள் குடியேறி உள்ளனர்.
விரைவில் அனைத்து வீடுகளிலும் பயனாளிகளை குடியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கின்றனர்.