ADDED : ஜூன் 12, 2024 12:15 AM
கூடலுார் : கோடை விடுமுறைக்கு பின் நேற்றுமுன்தினம்பள்ளிகள் திறக்கப்பட்டன.
சமீபத்தில் பெய்த மழையால் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியிருந்தது. மேலும் பள்ளிக்கு முன் கழிவுநீரோடையில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகியிருந்தது.
இதனால் மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் இருந்தது.
இந்நிலையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமையில் நேற்று கூடலுாரில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும், ஒட்டியுள்ள கழிவு நீரோடைகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.
பல்வேறு குழுக்களாக பிரிந்து இப்பணியில் ஈடுபட்டனர்.