தேனி: முத்துத்தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் கீழ் இயக்கும் பள்ளிகளின் மாணவிகளுக்கான எறிபந்து, கைப்பந்து, கோகோ போட்டிகள் நடந்து.
பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார் போட்டிகளை துவக்கி வைத்தார். உறவின்முறை ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இணைச்செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார், முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.