ADDED : ஜூலை 07, 2024 11:55 PM
தேனி : பழனிசெட்டிபட்டி பெரியார் நகர் முருகலட்சுமி 50.
கணவர் இறந்து விட்டார். மகன், மகள் உள்ளனர். உடல்நலக்குறைவால் முருகலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் உள்ளே துாக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் முருகலட்சுமி இருந்தார். போலீசார் உடலை மீட்டு தேனி மருத்துவ கல்லுாரி மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் நவீன்குமார் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.