/உள்ளூர் செய்திகள்/தேனி/ பட்டத்திகுளம் ஆக்கிரமிப்பால் நீர் தேங்கும் பரப்பளவு சுருங்கும் அவலம் சாகுபடிக்கு தேவையான நீர் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் பட்டத்திகுளம் ஆக்கிரமிப்பால் நீர் தேங்கும் பரப்பளவு சுருங்கும் அவலம் சாகுபடிக்கு தேவையான நீர் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
பட்டத்திகுளம் ஆக்கிரமிப்பால் நீர் தேங்கும் பரப்பளவு சுருங்கும் அவலம் சாகுபடிக்கு தேவையான நீர் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
பட்டத்திகுளம் ஆக்கிரமிப்பால் நீர் தேங்கும் பரப்பளவு சுருங்கும் அவலம் சாகுபடிக்கு தேவையான நீர் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
பட்டத்திகுளம் ஆக்கிரமிப்பால் நீர் தேங்கும் பரப்பளவு சுருங்கும் அவலம் சாகுபடிக்கு தேவையான நீர் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்

கண்மாயை மீட்க வேண்டும்
ஞானகுருசாமி, முன்னாள் தி.மு.க., எம்.பி., விவசாயி, கீழப்புரவு விவசாயிகள் சங்க சட்ட ஆலோசகர்: இக் கண்மாயில் நுழையும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கேட் அமைத்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றி கண்மாயின் நீளம், அகலத்தை கணக்கிட்டு புள்ளி விவரங்களை போர்டுகளில் எழுதி வைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு கேட்டினை அகற்ற வேண்டும். நீர் நிலைகள் ஆக்கிரமிப்பாளர்களை தண்டிக்க வேண்டும்.
கேள்விக்குறியாகும் விவசாயம்
ஜெயசீலன், விவசாயி, கீழப்புரவு விவசாயிகள் சங்க உறுப்பினர், பெரியகுளம்: கண்மாய் ஆக்கிரமிப்பினால் விவசாயத்தின் மீது நம்பிக்கை குறைகிறது. இக்கண்மாய் நிரம்பினால் சுற்றுப்பகுதியில் பல நூறு கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படும். தற்போது நீர் தேங்காமல் நெல், கரும்பு, மா, தென்னை விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது. கண்மாயில் நீர் உறிஞ்சும் களை செடிகளை அகற்ற வேண்டும்.