Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ எஸ்.எஸ்.புரம் ரங்கசமுத்திரம் இணைப்பு ரோடு சேதம்

எஸ்.எஸ்.புரம் ரங்கசமுத்திரம் இணைப்பு ரோடு சேதம்

எஸ்.எஸ்.புரம் ரங்கசமுத்திரம் இணைப்பு ரோடு சேதம்

எஸ்.எஸ்.புரம் ரங்கசமுத்திரம் இணைப்பு ரோடு சேதம்

ADDED : ஜூன் 28, 2024 12:14 AM


Google News
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், எஸ்.எஸ்.புரத்திலிருந்து ஜம்புலிப்புத்தூர் கண்மாய்க்கரை வழியாக ரங்கசமுத்திரம் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது. கடந்த பல ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த ரோட்டை ரங்கசமுத்திரம், நாச்சியார்புரம், ஜம்புலிப்புத்தூர், அருப்புக்கோட்டைநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்கள் தேனி செல்வதற்கு இணைப்பு ரோடாக பயன்படுத்தி வருகின்றனர். வாகனங்களில் விளை பொருட்களை கொண்டு செல்லவும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

பல ஆண்டுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட ரோடு தற்போது குண்டும் குழியுமாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. கேபிள் பதிக்கும் தனியார் நிறுவனத்தினர் ரோட்டின் ஓரத்தை தோண்டி சரியாக மூடாததால் பல இடங்களில் ரோடு சேதமடைந்து விட்டது. 2 கி.மீ., தூரம் உள்ள இந்த இணைப்பு ரோட்டை சீரமைக்க ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us