ADDED : ஜூன் 03, 2024 03:40 AM
உத்தமபாளையம்: பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணகுமரன், முதுகலை ஆங்கில ஆசிரியை சித்ரா தேவி, கணித பட்டதாரி ஆசிரியர் கண்ணன் ஆகியோர் பணியிலிருந்து ஓய்வு பெற்றனர்.
அவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. பேரூராட்சித் தலைவர் லட்சுமி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் மணிராஜா செய்திருந்தார்.