Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ அரசு டாக்டர் தற்கொலை கணவர் மீது புகார்

அரசு டாக்டர் தற்கொலை கணவர் மீது புகார்

அரசு டாக்டர் தற்கொலை கணவர் மீது புகார்

அரசு டாக்டர் தற்கொலை கணவர் மீது புகார்

ADDED : ஜூலை 05, 2024 09:47 PM


Google News
Latest Tamil News
சின்னமனுார்:தேனி மாவட்டம், சின்னமனுார் அரசு மருத்துவமனை டாக்டர் மணிமாலா. கணவர் மணிகண்டன், 45. இந்த தம்பதி சொக்கநாதபுரத்தில் வசித்தனர்.

இவர்களது மகன் தருண், 6. மணிகண்டன், சின்னமனுார் காந்தி சிலை அருகில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சரும நோய் சிறப்பு டாக்டரான மணிமாலா, சின்னமனுார் அரசு மருத்துவமனையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு மணிமாலா, தன் வீட்டில் துாக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. அவரை மணிகண்டன் மீட்டு, சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு துாக்கி வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மணிமாலா உடல், தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சின்னமனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மணிமாலாவின் தந்தை, போடியை சேர்ந்த மாரியப்பன், 64, தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக, மணிகண்டன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us