ADDED : ஜூலை 28, 2024 04:21 AM

கூடலுார் : கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினம் மற்றும் கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
செயலாளர் ராமகிருஷ்ணன், இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, கல்லூரி முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர்.
பல்வேறு துறை சார்ந்த மாணவிகளுக்கு அப்துல்கலாம் மற்றும் கார்கில் குறித்த கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி நடந்தது.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
துணை முதல்வர் வாணி, விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.