/உள்ளூர் செய்திகள்/தேனி/ குழந்தை திருமணம்: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு குழந்தை திருமணம்: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
குழந்தை திருமணம்: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
குழந்தை திருமணம்: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
குழந்தை திருமணம்: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 22, 2024 05:48 AM
ஆண்டிபட்டி: போடி அருகே உப்புகோட்டையைச் சேர்ந்தவர் சின்னன், இவரது 16 வயது மகள் தூரத்து உறவினரான மயிலாடும்பாறை சேர்ந்த மருது பாண்டியன் என்பவரை காதலித்து உறவினர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். சிறுமி கற்பமடைந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அபார்ஷன் ஆனது.
சிறுமி புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமணத்தை மறைத்த கணவர் மருதுபாண்டியன் அவரது தாயார் போதுமணி, சிறுமியின் தாயார் பாண்டியம்மாள், தந்தை சின்னன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.